world

சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

மேற்குலகு தங்களுக்கு நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை என்பதை நிரூபித்துவிட்டனர். 

அவற்றிற்கு ஒரே ஒரு எதிரி மட்டும்தான் உண்டு, அது அவர்க ளின் பொருளாயத நலன்களுக்கு எதிராக நிற்பவர்கள் மட்டுமே.

கம்யூனிசம், இஸ்லாம், நாஜி சம், சீனா, ரஷ்யா அல்லது யாருமே கூட மேற்குலகின் எதிரியல்ல

அவர்களின் (மேற்குலகின்) நலனுக்கு சேவை புரிபவர்கள் -அவர்களின் நண்பர்கள். அந்த நலன்களுக்கு அவர்கள் எதிராக இருந்தால் அவர்கள் எதிரிகள். வேறு வார்த்தைகளில் சொல்வ தானால் அவர்களுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. 

இவற்றிலெல்லாம் மிகவும் அருவருக்கத்தக்க உண்மை எதுவெனில்-ஆகப் பெரும் பான்மையான மக்கள் இதை அறிந்திருக்க மாட்டார்கள்-மேற்குலகமும், சியோனிஸ்ட்களும் (யூத வெறி அரசியல்), நாஜிசத்தை எதிர்க்கிறார்கள் என்பதுதான். 

பலருக்கு தெரிந்திருக்காது, உக்ரைனில் இருந்த நாஜி தலை வர்கள்-அவர்களின் நாஜி அமைப்பு இட்லரோடு பாதுகாப்பு, இராணுவம் மற்றும் தத்துவார்த்த நிலையில் இணைந்து செயல் பட்டனர்-இரண்டாம் உலகப் போருக் குப்பின் உக்ரைனிலிருந்து வெளி யேற்றப்பட்டனர். 

அவர்களில் சிலர் ஐரோப்பா விற்கு சென்றனர் சிலர் அமெரிக்கா விற்கு சென்றனர். 

1950களில் சிஐஏ அமெரிக்க நிர்வாகத்திடம், இத்தகைய நாஜிக் குழுக்கள் மீது இருந்த தடையை நீக்கச் சொன்னது. அப்போது சோவி யத் ஒன்றியத்திலிருந்த உக்ரைனில் அவர்கள் பயன்படுவர் என்றும் தெரிவித்தது. 

இந்த வரலாற்று உண்மைகள் இன்று நிரூபிப்பது என்னவெனில் ஜெலின்ஸ்கி ஒரு சியோனிஸ்ட் யூதர். 

இருப்பினும் அவர் இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களின் பக்க மிருந்து சண்டையிட்ட தீவிரவாத தேசிய இயக்கங்களை ஆத ரிக்கிறார்

அவர்களில் சிலர் யூதர்க ளின் இனஅழித்தலில் பங்கெடுத்த வர்கள். 

ஆகவே, ஒரு சியோனிஸ்ட் யூதர் எப்படி இத்தகைய அமைப்பு களை ஆதரிக்கலாம்?

மேற்குலகு இந்த அமைப்பு களை ஆதரிக்கிறது, இவற்றிற்கு இன்றைய பெயர் வலதுசாரி “அசோவ் அமைப்புகள்”.

அதே நேரத்தில் சியோனிஸ்ட் இஸ்ரேல் ஹொலகாஸ்ட்டில் பலி யானவர்களுக்காக எப்போதும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கி றது, அது ஆதரிக்கும் ஒரு தலைவர் யூதர்களைக் கொன்ற நாஜிக்களை ஆதரிப்பவர்.  இது அம்பலப்படுத்துவது என்னவெனில், மேற்குலகு அது பேசும் எல்லாவற்றிலும் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறது என்பதுதான். அது உலகில் எதைப் பற்றியும் கவலை கொள்வதில்லை, விதிவிலக்கு உலகை தான் ஆள வேண்டும், பிறநாடுகளின் வளங் களை கொள்ளையடிக்க வேண்டும். அவ்வாறு அடிக்கும் கொள்ளை யால் தனது நாட்டு கஜானாவை நிரப்ப வேண்டும் என்பதைத்தவிர!